Friday, November 27, 2009

மீண்டும் பெங்களூரில் பன்றிக் காய்ச்சல்



கர்நாடகாவில் 4 மாதங்களுக்கு முன்பு பன்றி காய்ச்சல் பரவியது. இந்த நோயால் இதுவரை 125 பேர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான மக்களுக்கு பன்றி காய்ச்சல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2 மாதமாக இந்த நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை. இப்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் பெங்களூரில் மீண்டும் பன்றி காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. ஆக்ஸ்போர்டு நர்சிங் கல்லூரி மாணவருக்கு இந்த நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த கல்லூரியை சேர்ந்த 35 மாணவர்கள் உட்பட 46 பேருக்கு ராஜிவ் காந்தி நெஞ்சக மருத்துவ மையத்தில் நேற்று முன்தினம் பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 4 மாணவர்கள் உட்பட 7 பேருக்கு பன்றி காய்ச்சல் தாக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும், கடந்த புதன்கிழமை 9 பேருக்கு பன்றி காய்ச்சல் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், கர்நாடகாவில் இந்த நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை 1,525 ஆக உயர்ந்துள்ளது.

0 comments:

Post a Comment