Sunday, November 22, 2009
அக்னி – 2 ஏவுகணை விண்ணில் சீறிப்பாயவிருக்கிறது...
Posted by
சிவா
8:00 AM
அணு ஆயுதம் சுமந்து சென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி – 2 ஏவுகணையை இந்தியா நாளை ( 23 ம் தேதி ) விண்ணில் செலுத்தி சோதனை செய்கிறது . இன்றைய சூழ்நிலையில் பாதுகாப்பு அவசியமாகும். இதற்கென உலக அளவில் வல்லரசு நாடுகள் ஆயிரம் கோடிக்கணக்கில் செலவழித்து வருகிறது.சில தினங்களுக்கு முன் சீனா 60 ம் ஆண்டு விழா கொண்டாடிய நேரத்தில் ராணுவ அணிவகுப்பு மற்றும் ஆயுதங்கள் குவிப்பை உலகிற்கு காட்டி பெருமை கொண்டது.இந்நிலையில் இந்தியாவும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி தங்களது படைக்கு பலம் சேர்த்து வருகின்றனர். மத்திய ரக அக்னி -2 ஏவுகணை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. இது 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள எதிரிகளின் இலக்கை தாக்கும். இது 17 டன் எடை கொண்டதாகும். 20 மீட்டர் நீளம் கொண்டதாகும். தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும். நாளை ஒரிசா மாநிலம் பாலசோர் கடல் பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்படுகிறது. இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி (டி.ஆர்.டி.ஓ.,) துறையினரும் இணைந்து இந்த ஏவுகணையை தயாரித்துள்ளனர். முதன் முறையாக இந்த முறை இரவில் சோதனை நடத்தப்படுகிறது .
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment