Friday, November 27, 2009

இந்தியா பாதுகாப்பாக உள்ளது - சிதம்பரம்




"பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள ஓர் ஆண்டுக்கு முன்பிருந்ததை விட தற்போது இந்தியா மிகச் சிறப்பான தயார் நிலையில் உள்ளது,'' என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி ஹெட்லி முன்னர் அடிக்கடி இந்தியா வந்து சென்றுள்ளான். அதுபோல இப்போது வந்தால், அவன் பாதுகாப்பு வலையில் சிக்கிக் கொள்வான். மும்பை தாக்குதல் நடந்த பின், அவன் ஒருமுறை தான் இந்தியா வந்துள்ளான். அதற்கு முன்னர் எட்டு முறை வந்துள்ளான்.ஹெட்லியை இந்தியாவில் கைது செய்ய புலனாய்வுத் துறையினர் தவறி விட்டனர் எனக் கூறப்படுவது சரியல்ல. அவன் விவகாரம் முற்றிலும் மாறுபட்டது. அவன் இங்கு வந்திருந்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொள்ளவில்லை.
ஒவ்வொரு நாளும் பாதுகாப்பை, அதற்கான திறனை நாம் மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம். உளவு நிறுவனங்கள் தகவல் சேகரிப்பதும், அவற்றை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதும் தற்போது மேம்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புப் படையினர் பலப்படுத்தப்பட்டுள்ளனர். நான்கு நகரங்களில் அவற்றின் துணைப் பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

0 comments:

Post a Comment